கடிகார பிரசன்னம் பார்ப்பது எப்படி என்றால் ? உங்கள் கையில் கட்டி இருக்கும் கடிகாரத்தை வைத்து , கடிகார ஆருடம் பார்க்க முடியும் ! கடிகார ஆருடம் என்றால் என்ன ? என்றால் .. கடிகாரத்தில் உள்ள மணி நிமிடத்தை வைத்து ஒருவர் நினைக்கும் விஷயம் நடக்குமா ? நடக்காதா ? என்று கூறும் முறையே கடிகார பிரசன்னமாகும் . ஜோதிடத்தில் பிரசன்னம் பார்க்கும் முறை பல இருக்கின்றன . அதில் அனைவரும் எளிமையாக பார்க்கும் பிரசன்னம் கடிகார பிரசன்ன ஆருடம் ஆகும் . இந்த கடிகார பிரசன்ன ஆரூடத்தை பற்றி தெளிவாக உங்களுக்கு இந்த பதிவில் கற்றுத் தர இருக்கிறேன் . இந்த கடிகார பிரசன்ன ஆருடத்தை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பார்த்து பலன் சொல்லலாம் . ஓரளவு ஜோதிடத்தில் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும் . ஒருவேளை உங்களுக்கு அடிப்படை ஜோதிடம் தெரியவில்லை என்றால் என்னுடைய What’s up வழி ஜோதிட பாடத்தில் இணைந்து படிக்கலாம் ! என்னை தொலைபேசி வழி தொடர்பு கொள்ளலாம் ph : 97 42 88 64 88 அடிப்படை ஜோதிட பாடங்களை நீங்கள் முறையாக படிக்கலாம் !

கடிகார பிரசன்னம் பார்ப்பது எப்படி ? இப்போது விரிவாக பார்க்கலாம் !
கடிகார பிரசன்னம் பார்ப்பது எப்படி என்றால் ? முதலில் கடிகாரத்தில் உள்ள அந்த 60 நிமிடங்களை இப்போது நீங்கள் ஞாபகத்திற்குள் கொண்டு வாருங்கள் , அதாவது ஐந்து ஐந்தாக நிமிடங்களை புரிந்து கொள்ளுங்கள் . அடுத்ததாக பெரிய முள் காட்டும் மணி நிமிடத்தை நீங்கள் ‘உதயம்’ என்று உங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள் , அதே வழியில் சிறிய முள் ஐந்து ஐந்தாக காட்டும் நிமிடங்களை ஆருடம் என்று நீங்கள் மனதில் இப்போது பதிய வைத்துக் கொள்ளுங்கள் .
கடிகார பிரசன்னம் எதற்காக பார்க்கப்படுகிறது ?
பிரசன்னம் எதற்காக பார்க்க பார்க்கப்படுகிறது என்றால் ஒருவர் தான் மனதில் நினைத்த விஷயம் நிறைவேறுமா நிறைவேறாதா என்று அறிந்து கொள்வதற்கு இந்த கடிகார ஆருடத்தை பயன்படுத்துவதால் சரியான பதில் அவருக்கு கிடைக்கும் ! இந்த கடிகார ஆருட பிரசன்னத்தை நீங்களே உங்களுக்கு தாராளமாக பார்த்துக் கொள்ளலாம் ! எனவே இந்த கடிகார பிரசன்னத்தை எப்படி பார்க்க வேண்டும் என்று தான் இந்த பதிவில் எழுதி இருக்கிறேன் . பதிவை முழுமையாக படித்தால் நீங்களும் கடிகார பிரசன்னம் பார்க்க முடியும் . உங்களுக்கும் பிரசன்னம் பார்த்துக் கொள்ளலாம் உங்களை நாடி வந்து கேள்வி கேட்பவர்களுக்கும் இந்த கடிகார பிரசன்ன ஆருடத்தை பயன்படுத்தி அவர்களுக்கு பதிலை சொல்லலாம் ! வாருங்கள் இப்போது இந்த கடிகாரத்தில் உள்ள மணி நிமிடங்களை , உதயம் ஆரூடமாக பிரிக்க வேண்டும் அதை எப்படி என்பதை ஒவ்வொரு தலைப்பு வாரியாக இங்கே எழுதி இருக்கிறேன் . முழுமையாக படியுங்கள் .
60 நிமிடங்களை 12 பாவகங்களாக குறிக்கும் முறையை இப்போது பார்ப்போம் !
முதலில் இந்த நிமிடங்கள் காட்டும் பாவகங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் கடிகார ஆருடம் பார்க்க முடியும் !
- 0 முதல் 5 நிமிடங்கள் வரை முதல் பாவகம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் .
- 5 முதல் 10 நிமிடங்கள் வரை இரண்டாம் பாவகம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் .
- 10 முதல் 15 நிமிடங்கள் வரை மூன்றாம் பாவகம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்
- 15 முதல் 20 நிமிடங்கள் வரை நான்காம் பாவகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் .
- 20 முதல் 25 நிமிடங்கள் வரை ஜந்தாம் பாவகமாக என்று எடுத்துக் கொள்ள வேண்டும் .
- 25 முதல் 30 நிமிடங்கள் வரை ஆறாம் பாவகம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் .
- 30 முதல் 35 நிமிடங்கள் வரை ஏழாம் பாவகம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் .
- 35 முதல் 40 நிமிடங்கள் வரை எட்டாம் பாவகம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் .
- 40 முதல் 45 நிமிடங்கள் வரை ஒன்பதாம் பாவகம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் .
- 45 முதல் 50 நிமிடங்கள் வரை பத்தாம் பாவகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் .
- 50 முதல் 55 நிமிடங்கள் வரை பதினோறாம் பாவகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் .
- 55 முதல் 60 நிமிடங்கள் வரை 12 ண்டாம் பாவகம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் .
பெரிய முள் உதயம் | சிறிய முள் ஆருடம் !
பெரிய முள் காட்டும் குறியினை உதயம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் , அதே சமயம் சிறிய முள் காட்டும் குறியினை ஆருடம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் . இப்பொழுது கீழே நான் கொடுத்துள்ள படத்தை பாருங்கள் ! ஒரு ஜாதகத்தில் லக்னத்தை முதற்கொண்டு ஒவ்வொரு கட்டத்தையும் பாவகம் என்று ஜோதிடத்தில் குறிப்பிடுவோம் . அதே போல அந்த ஜாதக கட்டத்தை 12 பாவகங்களாக குறிப்பிட்டு பலன் எடுப்போம் . அடிப்படை ஜோதிடம் படித்தவர்களுக்கு நான் கூறிய இந்த விஷயம் இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் . அதேபோலத்தான் இந்த கடிகாரத்தில் உள்ள மணி நிமிடங்களையும் 12 பாவங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும் .
அடுத்ததாக இந்த உதயம் என்றால் என்ன ? ஆருடம் என்றால் என்ன ? என்பதை முதலில் நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் . அதற்கான விளக்கத்தை இப்பொழுது பார்ப்போம் .
கடிகார ஆருடம் என்றால் என்ன ?
பதில் : பெரிய முள் காட்டும் மணியை கொண்டும் , அதேசமயம் சிறிய முள் காட்டும் நிமிடங்களைக் கொண்டும் , ஆரூடம் பார்க்க முடியும் ! இந்த ‘ஆருடம்’ என்கிற வார்த்தையின் பொருள் என்னவென்றால் , ஒருவர் மனதில் நினைத்த விஷயத்தை அறிந்து கொள்ள பயன்படுத்தும் பிரசன்ன முறையை ஆருடம் என்று ஜோதிடத்தில் குறிப்பிடுகிறோம் . அதாவது ஆருடம் என்றால் மனதில் ஏறி இருத்தல் என்று பொருள் . ஒருவர் தான் மனதில் நினைத்த விஷயம் நடக்குமா ? நடக்காதா ? என்று அறிந்து கொள்ள பயன்படுத்தும் பிரசன்ன ஜோதிட முறை இந்த ஆரூட முறையாகும் . இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என நம்புகிறேன் .
நாளை இதே இடத்தில் மற்ற விளக்கங்களை அதாவது கடிகார ஆருடத்தை எப்படி கண்டுபிடித்து ஒருவர் தான் மனதில் நினைத்த விஷயம் நடக்குமா ? நடக்காதா ? என்பதை கண்டுபிடிக்கும் முறையை நாளை தெளிவாக பார்க்கலாம் ! தொடரும் !
முக்கிய அறிவிப்பு : திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி ? என்கிற தலைப்பில் பகுதி ஒன்று இரண்டு என்று ஒவ்வொரு பகுதியாக எழுதி இருக்கிறேன். அந்த பதிவுகளையும் இதே என்னுடைய SN Ganapathi Astrologer Tamil website இல் பாருங்கள் ! அடுத்து நான் இங்கு கொடுத்துள்ள தலைப்புகளில் உள்ள லிங்கை தொட்டால் நேரடியாக அந்த பதிவுக்குள் நீங்கள் சென்று திருமண பொருத்த பதிவுகளை படிக்கலாம் ! அல்லது மேலே உள்ள menu ( home , about, blog ) வழியாகவும் நீங்கள் select செய்து படிக்க முடியும் ! இதில் Blog என்ற மெனுவை தொட்டு பதிவுக்குள் செல்ல முடியும் !
- திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி பகுதி – 1 ,
- திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி பகுதி – 2
- my youtube channel